சேலம் கோட்டம்: கட்டாயம் திறப்போம் - லாலு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சேலம் ரயில் கோட்டம் கட்டாயம் தொடங்கப்படும். திறப்பு விழா கட்டாயம் நடைபெறும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்தக் கோட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது போகப் போக சரியாகி விடும்.
நான் தொடக்க விழாவுக்கு கட்டாயம் போவேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார் லாலு பிரசாத் யாதவ்.
சேலம் கோட்டத் திறப்பு விழாவைத் தடுக்க கேரள தரப்பில் பல்வேறு வகையான உபாயங்கள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications