மனைவியுடன் சிரித்து பேசிய சகலைகன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார்.

அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதைப் பார்த்த முத்துப்பாண்டிக்கு கோபம் வந்தது. தனது மனைவிக்கும், சகலைக்கும் கள்ளத் தொடர்பு இருக்குமோ என சந்தேகமடைந்தார் அவர்.

இதையடுத்து கோபத்துடன் விருமாண்டி மீது பாய்ந்த முத்துப்பாண்டி அவரது கன்னத்தை பலமாக கடித்தார். பின்னர் வாயுடன் வந்த கன்னத்துச் சதையை துப்பி விட்டு தப்பி விட்டார்.

பலத்த காயமடைந்த விருமாண்டி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். போலீஸிலும் இதுகுறித்து புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் கன்னக் கடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+