Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயக்க மருந்து கலந்த இளநீர் கொடுத்துசிறுமி கற்பழித்துக் கொலை - 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே புல் பறிக்கச் சென்ற 13 வயது சிறுமியை, இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்துக் கொலை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாச்சலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தங்கமணி (13). இவர் நேற்று மாலை புல் பறிப்பதற்காக அருகில் உள்ள வயலுக்குச் சென்றார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணி மற்றும் தங்கலிங்கம் ஆகிய இரு இளைஞர்கள் அங்கு வந்தனர். இளநீர் குடிக்குமாறு கூறி தங்கமணியிடம் இளநீர் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் ஏற்கனவே மயக்க மருந்து கலந்து வைத்துள்ளனர்.

மயக்க மருந்து கலந்த இளநீரைக் குடித்த தங்கமணி சில நிமிடங்களில் மயக்கமடைந்தார். இதையடுத்து இரு இளைஞர்களும் அந்த சிறுமியைக் கற்பழித்தனர். பின்னர் கொலை செய்து உடலை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வீசி விட்டுத் தலைமறைவாகினர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மங்களம்பேட்டை போலீஸார் இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+