சாஹர் பியரை தோற்கடித்தார் சானியா!
சாண்டியாகோ (கலிபோர்னியா):அமெரிக்க ஹார்ட் கோர்ட் டென்னிஸ் அரங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சானியா மிர்ஸா, அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சாஹர் பியரை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு ஹார்ட் கோர்ட் (களிமண் தரை) டென்னிஸில் அடுத்தடுத்து வெற்றிகள் குவிந்து கொண்டிருக்கின்றன.சமீபத்தில் முடிந்த ஸ்டான்போர்ட் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இரட்டையர் பட்டத்தை வென்றார். அவர் வெல்லும் சர்வதேச அளவிலான 2வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாண்டியாகோ நகரில் தொடங்கியுள்ள அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியிலும் சானியா அசத்த ஆரம்பித்துள்ளார்.
ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 12வது நிலை வீராங்கனையும், சானியாவின் இரட்டையர் பிரிவு பார்ட்னருமான இஸ்ரேலின் சாஹர் பியரும் மோதினர்.
இப்போட்டியில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா தற்போது உலக பெண்கள் டென்னிஸ் ரேங்கிங்கில் 31வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications