27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு மனு மீதுஆகஸ்ட் 7ம் தேதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனு நேற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இந்த மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், பிரதான மனுவுடன் சேர்த்து விசாரிக்கும் என்று தெரிவித்தார்.
பிரதான மனு அரசியல் சாசன பெஞ்ச் முன்பு ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications