தமிழர் கட்சி ஆதரவு வாபஸ்:ராபக்க்ஷே அரசுக்கு திடீர் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் ராஜபக் ஷே அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இந்தக் கட்சிக்கு ஆறுமுகத் தொண்டைமான் உள்ளிட்ட 8 எம்.பிக்கள் உள்ளனர்.

Rajapakshe

இந்தக் கட்சி ஆட்சியிலும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென இக்கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

மேலும், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆறுமுகத் தொண்டைமான் உள்ளிட்ட 5 அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர்.

தமிழர் கட்சியின் ஆதரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக்ஷே அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று மாலையில் கூட்டி விவாதித்தார்.

இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வாபஸ் பெற தீர்மானித்துள்ளது. இதனால் ராஜபக்ஷே அரசுக்கு பெரும் ஆபத்து உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+