கிருஷ்ணசாமி கைது: பஸ் மீது கல் வீசியதொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
டாடாவின் டைட்டானியம் ஆலை அமைவதை எதிர்த்து திசையின்விளையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை கண்டித்து சிவகிரியில் அரசு பேரூந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் பொன்னுசாமி, மாடசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாளையில் அரசு மதுபான கடையில் தகராறு செய்த 11 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications