மண்டபம் முகாமிலிருந்து 10 பேர் தப்பினர்இலங்கை கடற்படையினர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பிய 10 பேர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர்.
அகதி முகாமின் காவலையும் மீறி இவர்கள் நேற்றிரவு தப்பினர். இவர்களுக்காக ராமேஸ்வரத்தில் பைபர் கிளாஸ் படகு தயாராக இருந்துள்ளது.
அதில் தப்பிய இவர்களை கச்சத் தீவு அருகே இலங்கை கடற்படை மடக்கி பிடித்துச் சென்றது.
தப்பியவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல என கியூ பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அகதிகளாக வந்தவர்கள் இங்கிருக்கப் பிடிக்காமல் தப்பியபோது பிடிபட்டுள்ளனர் என்றனர்.
ஆனால், அவர்களுக்காக படகு எப்படி தயார் நிலையில் இருந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications