கோவை குண்டுவெடிப்பு: இதுவரை 54 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மேலும் 7 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கி தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 105 பேர் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களில் 47 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு ஜாமீன் வழங்கினார்.
இவர்கள் தவிர மேலும் 19 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதும் இன்று விசாரணை நடந்து வருகிறது.
இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 54 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications