மலேசியா: பஸ் விபத்தில் 19 பேர் பலி
கோலாலம்பூர்:மலேசியாவில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். மலேசியாவில் நடந்த மிக மோசமான விபத்து இது.
மலேசியாவின் வடக்கு தெற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் புகிட் காண்டாங் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.
தனியார் போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்து உயரமான இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக தாறுமாறாக ஓடி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் பேருந்தின் டிரைவரும் இறந்து விட்டார்.
பேருந்தின் இயக்குநர் தூங்கியிருக்க வேண்டும், அதனால்தான் விபத்து நேர்ந்திருக்கும் என தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமிருதீன் கமர்தீன் கூறினார்.
மலேசியாவில் இதுபோன்ற விபத்து நடந்ததே இல்லையாம். மலேசியாவில் மிகச் சிறந்த சாலை வசதிகள் உள்ளன. வாகனங்கள் படு வேகமாக செல்வது இங்கு சர்வ சாதாரணம்.












Click it and Unblock the Notifications