பீடி தொழிலாளர் குழந்தைகள் நலனுக்கு ரூ.12 கோடி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:தமிழகத்தில் உள்ள பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள் நலனுக்காக மத்திய அரசு ரூ. 12 கோடி நிதியை தருகிறது. இதில் நெல்லை மாவட்டத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமாசிங்கபுரத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் தமிழக சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், இந்தியாவின் 30 மாநிலங்களில் உள்ள பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.62 கோடி ஆகும். அதில் குறிப்பாக ரூ.12 கோடி தமிழ் நாட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே பீடித் தொழிலாளர் குழந்தைகள் அரசின் திட்டத்தினை பயன்பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications