60 பெட்டிகளில் ரயிலில் வந்த பல கோடி பணம்;4 லாரிகளில் வங்கிகளுக்கு சப்ளை!
திருநெல்வேலி:ரிசர்வ் வங்கியிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கான பணம் இன்று காலை நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்திறங்கியபோது பரபரப்பு ஏற்பட்டது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 60 பெட்டிகளில் இந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கொண்டு வரப்பட்டன. பணப் பெட்டிகள் நெல்லை ரயில் நிலைய குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. இதையொட்டி அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பண பெட்டிகளை லாரிகள் மூலம் வங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
இந்த பணம் நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கனரா வங்கிக்கும், நாகர்கோவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 5 வங்கிகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
லாரிகளின் பணம் ஏற்றுவதைபொட்டி ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications