போலி ஆவணம் மூலம் 600 ஏக்கர் நிலத்தைரூ.18 கோடிக்கு விற்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே உள்ள 600 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வட நாட்டு தொழிலதிபருக்கு ரூ. 18 கோடிக்கு விற்க முயற்சி நடந்துள்ளது.

கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் கிராமத்தில் உள்ள பலர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் பலருக்கும் நிலங்கள் உள்ளன.

இதை தெரிந்து கொண்ட சென்னையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் போலியான ஆவணங்களை தயார் செய்து மேற்கு வங்காளம் சிலிகுரி மாவட்டத்தை சேர்ந்த பங்கஜ்குமார் என்ற தொழிலதிபருக்கு இந்த நிலங்களுக்கான மோசடி ஆவணங்களை தயார் செய்து விற்க முயன்றுள்ளார்.

சுமார் 600 ஏக்கர் நிலங்களை ரூ.18 கோடிக்கு விற்க இருந்தார்.

இந்தத் தகவலை அறிந்த அந்த ஊர் மக்கள் கோவில்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் நில விற்பனையில் எந்த மோசடிக்கும் இடம் தர மாட்டோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதே நேரத்தில் போலி ஆவணம் தயார் செய்து தங்களது ஊர் நிலத்தை விற்க முயன்ற தினேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+