மகனைக் காப்பாற்ற முயன்று ரயிலிலிருந்துதவறி விழுந்த பெண் பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:தனது மகன் ரயிலிலிருந்து கீழே விழுந்து விடாமல் காப்பாற்றப் பாய்ந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பீகாரைச் சேர்ந்த எம்.கே.ஷா, பெங்களூரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா ஷா (26). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

விடுமுறைக்காக ஷா தனது குடும்பத்துடன் பீகார் சென்றிருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேருவதற்காக பெங்களூருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.

இவர்கள் பயணித்த முஷாபர்பூர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் அருகே உள்ள லத்தேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தனது இரு மகன்களுக்கும் முகம் கழுவி விட அவர்களை அழைத்துக் ெகாண்டு வந்தார்.

அப்போது அவர்களில் ஒரு மகன் அம்மாவின் கையை உதறி விட்டு வேகமாக ஓடினான். அவன் கீழே விழுந்து விடப் போகிறானோ என்று அஞ்சிய அனிதா ஷா, அவனைப் பிடிக்க ஓடினார். அப்போது ரயில் வாசல் படிக்கு அருகே உள்ள கதவு தட்டி, ரயிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்.

இதைப் பார்த்து அலறிய பயணிகளும், ஷாவும் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தினர். ரயில் வேகமாக போய்க் கொண்டிருந்ததால், சிறிது தூரம் ஓடிய பிறகு நின்றது.

கீழே இறங்கி பார்த்தபோது அனிதா ஷா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அனைவரும் கதறி அழுதனர்.

ரயில்வே போலீஸார் விரைந்து வந்து அனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+