இலங்கையில் 13 இந்திய ஜோதிடர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில் சுற்றுலா விசாவில் வந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி இந்தியாவைச் சேர்ந்த 13 ஜோதிடர்கள் உள்பட 16 பேரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை குடியுரிமை அதிகாரிகள் கூறுகையில், இந்த 16 பேரும் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். ஆனால் விசா காலத்தையும் தாண்டி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
கைது செய்யயப்பட்டவர்களில் 13 பேர் ஜோதிடர்கள். ஒருவர் பெண். இந்த ஜோதிடர்கள் இங்கு தங்கி பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
கொழும்பில் கடந்த வாரம் நடந்த இரு வேறு சோதனைகளின்போது இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு அருகே உள்ள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications