என்.டி.ஆர் பேத்தியை மணக்கிறார் நாயுடுவின் மகன்
ஹைதராபாத்:ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் திருமணம் நாளை ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.
நாயுடுவின் மகன் லோகேசுக்கும் நடிகரும் மறைந்த என்.டி.ராமாராவின் மகனுமான பாலகிருஷ்ணாவின் மகள் பிரமணிக்கும் திருமணம் நடைபெறுகிறது. லேகேஷ், ராமாராவின் மகள் வயிற்றுப் பேரனாவார். மாமாவின் மகளை மணக்கிறார் லோகேஷ்.
இவர்களின் திருமணம் நாளை ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் நடைபெறவுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் இதில் கலந்து ெகாள்ளவுள்ளனர்.
திருமணத்தையொட்டி என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவின் நண்பரான கதிரிபாபு ராவ் வீட்டில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிதாப் குடும்பத்தினர் உட்பட முக்கியமான விஐபிக்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் லோகேஷும், பிரமணியும் இணைந்து டான்ஸ் ஆடினர். மேலும் குடும்பத்தினரும் இந்த ஆட்டம், பாட்டத்தில் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடுவையும் வந்து ஆடுமாறு பாலகிருஷ்ணா வற்புறுத்தவே அவரும் எழுந்து சிறிது நேரம் ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.
இந்த திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் வரவிருப்பதால் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications