மேலும் பல குண்டு வெடிக்கும்புரளியால் ஆந்திராவில் பெரும் பீதி!
ஹைதராபாத்:ஆந்திராவில் தலைமைச் செயலகம் உள்பட மேலும் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என கிளம்பிய புரளியால் ஆந்திரா முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து ஆந்திர மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் இன்று காலை போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது.
அதன்படி தலைமைச் செயலகம் உள்ளிட்ட ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரட்டை நகரங்களில் 3 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் ஹைதராபாத், செகந்தராபாத் மற்றும் ஆந்திரா முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளித் தகவல் எனத் தெரிய வந்தது.
இருப்பினும் ஆந்திரா முழுவதும் முக்கிய இடங்கள், கட்டடங்கள், அலுவலக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications