For Daily Alerts
Just In
பஸ்-லாரி மோதல்: கண்டக்டர் உள்பட 2 பேர் பலி
திருச்சி:திருச்சி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் இரண்டு அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் நெடுப்பட்டி என்ற இடத்தில் எதிரில் வந்த லாரியின் மீது பஸ் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் கண்டக்டர் கோவிந்தராஜ் (44), திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விஜயகுமார்(39) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பேருந்தில் பயணம் செய்த 9 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Comments
Story first published: Sunday, May 27, 2007, 5:30 [IST]