ராமர் பாலத்திற்கு குண்டு: கேஸ் போடுவேன்-சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:ராமர் பாலத்தை ஆர்.டி.எக்ஸ் வைத்துத் தகர்த்த ரகசியத் திட்டம் போட்டுள்ளனர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை வாங்குவேன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

Subramanyam Swami

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பாலத்தை கப்பல்களை வைத்து இவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து ஆர்.டி.எக்ஸ் குண்டு போட்டு பாலத்தை உடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

செப்டம்பர் 3வது வாரத்தில் இதை செய்ய ரகசியத் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அதை நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத் தடுத்து நிறுத்துவேன். நாளை மறு நாள் கேஸ் போடுவேன்.

ஈராக்கில் அமல்படுத்தப்பட்ட எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காங்கிரஸ்காரர்கள் பலர் ஊழல் செய்தனர். இந்த ஊழல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அமெரிக்கா திரட்டி வைத்துள்ளது.

இதைக் காட்டித்தான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அது இந்தியாவை நிர்பந்தப்படுத்துகிறது. அதனால்தான் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஒப்பந்தம் குறித்து அவசரம் காட்டுகிறார்கள் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+