நகராட்சி ஆணையர் அறைக்குபூட்டு போட்ட மக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கடையநல்லூர்:குடிநீர்ப் பிரச்சினை, தெரு விளக்கு பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாத நகராட்சியைக் கண்டித்து ஆணையரின் அறைக்குப் பூட்டுப் போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 31வது வார்டு பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனை நிலவி வருவதாகவும், அதை விரைந்து சீர் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. பொது மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்த போதிலும் அவர் அலுவலகத்தில் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கனக்கானோர் தங்கள் வார்டு பிரச்சனையை கூற நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் ஆணையாளர் இல்லாததாலும், அவருடைய அறை பூட்டி இருந்ததாலும் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அறைக்கு இன்னொரு பூட்டைப் போட்டுப் பூட்டி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+