பேச்சை குறைங்கப்பா... சுதர்சனம் புலம்பல்!
சென்னை:காங்கரிஸ்காரர்கள் உழைக்கவே தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று காங்கிரஸ் சட்டப் பேரவை தலைவர் சுதர்சனம் வருத்தத்துடன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் விழா தொடங்கியது. அதில் சுதர்சனம் பேசியதாவது,
காங்கிரஸை சேர்ந்த இளைஞர்கள் முதலில் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதற்கு உங்களுக்கு பக்கபலமாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இருப்பார்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்சியை இழந்து 40 வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் மீண்டும் காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்க முடியவில்லை.
காங்கிரசார் முதலில் உழைக்க தயாராக இருக்க வேண்டும். அப்ேபாதுதான் ஆட்சியை பிடிக்க முடியும். கடந்த 40 ஆண்டுகளாக உழைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி சொல்லவேண்டும். அப்போது தான் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என்று சுதர்சனம் பேசினார்.












Click it and Unblock the Notifications