For Daily Alerts
Just In
கோவை விமான நிலையத்தில் சரத் ரசிகர்கள் மோதல்
கோவை:கோவைக்கு வந்த நடிகர் சரத்குமாரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சரத்குமார் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது கோவை மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் உபையதுர் ரகுமானுக்கும், மாநகர தலைவர் கம்பன் கருணாநிதிக்கும் இடையே காரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பிரச்சினை உருவானது.
இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது. இதையடுத்து ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர்.
Comments
Story first published: Thursday, May 31, 2007, 5:30 [IST]