மலேசியா: அழுக்குச் சட்டையுடன் டாக்சி ஓட்டினால்br/அபராதம்!
கோலாலம்பூர்: கசங்கிய சட்டை, அழுக்குச் சட்டையுடன் டாக்சி ஓட்டும் டிரைவர்களுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது. தூய்மையான உடையில்தான் டாக்சி டிரைவர்கள் செயல்பட வேண்டும் என்றும் அது கண்டிப்புடன் கூறியுள்ளது.
மலேசிய டாக்சி டிரைவர்களுக்கு அந்நாட்டு வணிக வாகன உரிமம் வழங்கும் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதந்படி வெள்ளைச் சட்டை, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு ஷூக்களை டாக்சி டிரைவர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் சட்டையை டக் இன் செய்திருக்க வேண்டும்.
இதில் ஏதாவது மாற்றம் இருந்தாலோ அல்லது டக் இன் பண்ணாமலோ அல்லது ஷூ ஒரு நிறமும், பேன்ட் ஒரு நிறமுமாகவோ இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் நீட்டாக இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இதுதவிர தூய வெள்ளை சட்டையில் வராதவர்களுக்கும், சாக்ஸ் இல்லாமல் ஷூ போடுபவர்களுக்கும் 29 டாலர் முதல் 86 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது மூன்று நாள் சம்பளத்தின் சராசரித் தொகையை அபராதமாக கட்ட வேண்டுமாம்.
மலேசிய அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அந்நாட்டு டாக்சி டிரைவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியெல்லாம் செய்ய வேண்டுமானால் நிறைய செலவு செய்ய வேண்டும். பிறகு குடும்பத்தை எப்படிக் கவனிப்பது என்று அவர்கள் புலம்புகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் வேறு மாதிரியாக புலம்புகிறார்களாம். டாக்சி டிரைவர்கள் மீட்டர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் புலம்பலாம்!!












Click it and Unblock the Notifications