திருச்சியில் 7 மாவட்ட எஸ்.பிக்களுடன்br/கூடுதல் டிஜிபி ஆலோசனை
திருச்சி:
திருச்சியில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் 7 மாவட்ட எஸ்.பிக்களுடன் கூடுதல் டிஜிபி ஆர்.என்.சவானி ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி மாநகர ஆணையர், திருச்சி, கருர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிகளுடன் கூடுதல் டிஜிபி சவானி ஆலோசனை நடத்தினார்.
அதில் காவல் துறைக்கு தேவையான நிதி பற்றியும், புதிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வில் மத்திய மண்டல ஐஜி ராஜா, திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ், தஞ்சை டிஐஜி ஆபாஷ் குமார், திருச்சி போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜீவால், கருர் எஸ்பி சண்முகவேல், திருச்சி எஸ்பி ராஜசேகரன், பெரம்பலூர் எஸ்பி பிரேம் ஆனந்த் சின்கா, புதுக்கோட்டை எஸ்பி கபில், தஞ்சை எஸ்பி அமித்குமார், திருவாரூர் எஸ்பி அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications