கள்ளு கடைகளை திறக்க கோரும் பாஜக!
கோவை:
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்கக் கோரி வரும் 13ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்கு உரியது. பல ஆலைகளின் கழிவுகள் நேராக ஆறுகளில் தான் கலக்கிறது. இதனால் ஆறுகளில் சொல்ல முடியாத மாசு ஏற்படுகின்றது. இதனால் விவசாயம் அழிந்து போகின்றது.
விவசாயிகளுக்கு தின கூலி கூட முழுமையாக கிடைப்பது இல்லை. பொள்ளாச்சி விவசாயிகளின் நிலை அதைவிட மோசமாக உள்ளது. தென்னை மரத்தினை குத்தகைக்கு விட்டுத் தான் லாபம் பார்க முடிகிறது.
சித்தூர் விவசாயிகளை விட 50 சதவீதம் லாபம் குறைவாகத்தான் பார்க்க முடிகிறது.
டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது ஏன் கள்ளுக்கடைகள் இருக்கக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி அரசு கள்ளுக்கடையை திறக்கலாம். இக்கோரிக்கையை முன் வைத்து முன்ளாள் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் தஞ்சையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications