தென்காசி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil


தென்காசி:

தென்காசியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் தென்காசி நகரமே பரபரப்புக்குள்ளாகியது.

Thenkasi RTO office

தென்காசி, பாறையடி தெருவில் வட்டார போக்குவரத்து அலுவலகம்(ஆர்டிஓ) உள்ளது. இன்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு மர்ம போன் ஒன்று வந்தது.

போனில் பேசியவர் ஆர்டிஓ அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் அந்த குண்டு வெடிக்கும் என்றும் கூறினார்.

Thenkasi RTO office

இந்த தகவலை அடுத்து அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் போலீசார் வந்து அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

சோதனைக்கு பின்னர்தான் இது வெறும் புரளியா அல்லது வெடிகுண்டை உண்மையிலேயே வைத்துள்ளார்களா என்பது பற்றி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தை பாறையடி தெரு பகுதியிலிருந்து மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த மிரட்டலை யாரோ உள்ளூர்வாசி தான் கொடுத்திருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+