புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநில கடலோரம், வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரிஸ்ஸாவின் தெற்கு பகுதியில் உள்ள கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது ஆந்திர கடற்பகுதி வழியாக தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் 45-55 கிமீ வேகத்துடன் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications