இரவு 11 மணிக்கு மேல் பார் திறப்புbr/10 டாஸ்மாக் ஊழியர்கள் கைது
திருநெல்வேலி:
அரசு உத்தரவை மீறி இரவு 11 மணிக்கு மேலும் டாஸ்மாக் மது பார்களை திறந்து வைத்திருந்த டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்பு காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இதையடுத்து வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தினார்.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணியாக மாற்றி அரசு அறிவித்தது. குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி கடைகள் மற்றும் பார்கள் திறந்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு போலீசார் டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில், மது விலக்கு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் உமா தலைமையிலான போலீசார் பாளை, ஜங்ஷன், மேலப்பாளையம், டவுண், பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 5 பார்கள் இரவு 11 மணிக்கு மேல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காந்திமதி நாதன், தாஸ், செல்லப் பாண்டியன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், செல்வம், அப்துல் சலீம், முருகன், குமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 76 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications