For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News


ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 10 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

கடந்த 11ம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து விரட்டினர். பின்னர் 10 மீனவர்களையும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றையும் கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.

10 மீனவர்களும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த வெறிச் செயலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 2500க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சிறை பிடிக்கப்பட்டுள்ள 10 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X