தொழில்மயமாக்கலை ஊக்கப்படுத்த தமிழக அரசுbr/அமைக்கும் 10,000 சமுதாய மையங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தொழில்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடையே கொண்டு செல்ல 10,000 சமுதாய சேவை மையங்களைத் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இந்திய தொழிலக சம்மேளனத்தின் (சிஐஐ) தமிழகப் பிரிவின் சார்பில் வருடாந்திர தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறை மாநாடு 'கனெக்ட் 2007' நடந்தது.

மாநாட்டின் நோக்கம் குறித்து சிஐஐ (தமிழகம்) தலைவர் கோபால் சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் தொழில்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே தெரிவிக்க, 10 ஆயிரம் சமுதாய சேவை மையங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

இதுதவிர, சிஐஐயுடன் இணைந்து, சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கும் பள்ளிகளைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிஐஐ முன்னாள் தலைவருமான சேஷசாயி கூறுகையில், நிலையான வளர்ச்சிக்கு, மூலாதரப் பெருக்கமும், ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியம். இதை ஊக்குவிக்க அறிவுசார் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவது அவசியம் என்றார்.

டி.சி.எஸ். நிறுவன தலைமை நிதி அதிகாரியும், மாநாட்டின் தலைவருமான மகாலிங்கம் கூறுகையில், தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறைக்கு தமிழகம் சிறந்த களமாக விளங்குகிறது என்றார்.

தென் பிராந்திய சிஐஐ தலைவர் பி.கே.மொஹபத்ரா கூறுகையில், தமிழகத்தில் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் உற்பத்திக்குத் தேவையான திறமையாளர்கள் அதிகம் உள்ளனர். இதை உருவாக்கிய தமிழக அரசு பாராட்டுக்குரியது என்றார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்கள் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+