ரூ. 80,000 கையாடல்-வங்கி ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சீர்காழி:
சீர்காழி பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் ஊழியரே வங்கியிலிருந்து ரூ. 80 ஆயிரம் பணத்தை மோசடி செய்து பிடிபட்டுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் பனங்கட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்வரது மனைவி ஜெயலட்சுமி கணக்கு வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கணக்கிலிருந்து ரூ 80 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து உண்மை நிலவரம் அறிய வங்கி மேலாளரிடம் மனு கொடுத்தார்.
இதன் போரில் இவரது கணக்கை ஆராய்ந்த போது அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வேலுசாமி என்பவர் பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வேலுச்சாமி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications