செல்வி வீட்டில் தாக்குதல்-குமாரசாமி கடும் கண்டனம்
பெங்களூரூ:
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரு சம்பவங்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவிட்டுள்ளார் குமாரசாமி.
உள்துறை அமைச்சர் கண்டனம்:
இந்த சம்பவத்திற்கு கர்நாடகா உள்துறை மந்திரி பிரகாசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடப்பது தமிழர்களுக்கும், கன்னட மக்களுக்கும் இடையே உள்ள அமைதியை குலைக்க நடக்கும் சதியாகும். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் விளக்கியுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications