வகுப்பறையில் சாமியாடிய மாணவர்கள்!
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பள்ளிக்கூடத்தில் நடந்த கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் மற்றும் வகுப்பறையில், மாணவர்கள் எழுந்து அருள் வந்தது போல ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ளது பண்டாரபுரம். இந்த ஊரைச் சேர்ந்த கென்னடி என்பவரது மகன் கிளிண்டன். இவர் சத்யநகரம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் 7 வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை பள்ளியில் ஜெபக் கூட்டம் நடந்தபோது மாணவன் கிளிண்டன் திடீரென கூட்டதுக்கு மத்தியில் சாமியாடினார். இதனால் ஜெபக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிளிண்டனை வீட்டுக்கு தூக்கி சென்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஸ்பெஷல் வகுப்பு நடந்தது. அப்போது கிளிண்டன் மீண்டும் சாமியாடினார். இதை தொடர்ந்து ஸ்பெஷல் வகுப்பு ரத்து செய்யப்பட்டது.
திங்கள்கிழமை வகுப்பு நடந்தபோது கிளிண்டன் தவிர 5 மற்றும் 6ம் வகுப்பை சேர்ந்த மேலும் 4 மாணவர்கள் அருள் வந்து ஆடத் தொடங்கினர்.
ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருந்தபோது வெவ்வேறு வகுப்பறைகளில் ஓரே சமயத்தில் இவர்கள் சாமியாடியது சக மாணவர்களை பீதியடைய செய்தது.
இதையடுத்து 5 மாணவர்களும் தத்தம் வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications