அடுத்த வாரம் 3வது அணி கூட்டம்; ஜெ. நீடிப்பாரா, விலகுவாரா?
டெல்லி:
3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டணியில் அதிமுக நீடிக்கிறதா, இல்லையா என்பது இக்கூட்டத்தில் தெரிய வரும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு 3வது அணி உதயமானது. ஆனால் தேர்தல் நாளன்றே அந்த அணி பிளவுபட்டுப் போனது. குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற கூட்டணியின் முடிவை கூட்டணி உருவாக அரும்பாடுபட்ட ஜெயலலிதாவை உதறித் தள்ளியதால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குழம்பிப் போனார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், 3வது அணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்றே தெரியவில்லை. எங்களை எதற்கும் கூப்பிடுவதில்லை என்று ஜெயலலிதா புலம்பினார்.
இதற்குப் பதிலளித்த முலாயம் சிங் யாதவின் கட்சி தலைவர் அமர்சிங், ஜெயலலிதாவுக்குப் போன் செய்தால் அவர் கிடைப்பதே இல்லை. அவரது உதவியாளர்தான் பேசுகிறார் என்றார்.
இந்த நிலையில், 3வது அணியின் கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைவது, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் முக்கியக் கூட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இதில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வருகிற 26ம் தேதி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய தேசிய லோக்தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறுகையில், கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை களைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
ஜெயலலிதாவைப் பொருத்தவரை யாருடன் கூட்டணி என்பதில் தற்போது அவர் குழம்பிப் போயுள்ளதாக தெரிகிறது. 3வது அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாகவும் அலுத்துக் கொள்கிறார். மறுபக்கம் பாஜக தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதனால் இரு கூட்டணியையும் சம தொலைவில் வைத்திருக்க ஜெயலலிதா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம், பாஜகவுடன் மிகவும் நெருங்கிப் போய் விடாமல் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா.
ஒரு வேளை இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளாவிட்டாலும் கூட கூட்டத்தைப் புறக்கணிக்காமல் 2ம் மட்டத் தலைவர்களை கூட்டத்துக்கு அவர் அனுப்பி வைக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications