தேர்தலுக்கு பாஜக தயார் - ரவிசங்கர் பிரசாத்
திருநெல்வேலி:
பாராளூமன்ற மன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் அகில இந்தியச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாஜக சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரானது அல்ல. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றுவதையே கட்சி ஆதரிக்கிறது.
மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புகள் இருக்கும்போது, திட்டத்தை விரைவாக்கி ராமர் பாலத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன. ராமர் பாலம் இருக்கிறதா என்று காங்கிரஸ் கட்சியினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுவதும் எழுந்த கண்டனத்தை அடுத்து அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
மற்ற மத தெய்வங்களை சுட்டிகாட்டி இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா. இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை மிகவும் புண் படுத்தியுள்ளது. மத ரீதியாக அடுத்தவர்கள் உணர்வை புண்படுத்துபவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனவே இதற்காக சோனியா, மன்மோகன் சிங், மன்னிப்பு கேட்க வேண்டும். தீவிரவாதமற்ற வலுவான பாரதத்தையும் வலுவான தமிழகத்தையும் உருவாக்கவே பாஜக விரும்புகிறது.
மத்தியில் உள்ள காங்கிரஸ், கம்னியூஸ்ட் கூட்டணி கட்டாயத்தால் ஏற்பட்ட கூட்டணி. இக்கூட்டணி நீண்டகாலம் நீடிக்காது. எந்த நேரத்திலும் பாராளுமன்ற தேர்தல் வரலாம். அதற்கு பாஐக தயாராக உள்ளது.
சென்னையில் ஜெயலலிலாதவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். வேறு எதுவும் காரணம் கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications