சென்னையில் அதிமுக பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை
சென்னை:
சென்னையில் அதிமுக பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் (40). இப் பகுதியின் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆவார்.
இவருக்கு 3 கடைகள் சொந்தமாக உள்ளன. இது தவிர கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார். இதனால் இவருக்கு பலருடன் முன் விரோதம் இருந்து வந்தது.
ேமலும் அதிமுக ஆட்சியில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஒரு கொலையிலும் சின்ன கண்ணனுக்கு தொடர்பு இருந்தது.
இந் நிலையில் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் தனது வீடு இருக்கும் பஜனை கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
3 பேர் அவரை பிடித்துக் கொள் ஒருவன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தான். அதில் அந்த இடத்திலேயே சின்ன கண்ணன் துடிதுடித்து இறந்தார்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் துணை கமிஷ்னர் ராம சுப்பிரமணி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சின்ன கண்ணனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது பெண்கள் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.