மதத்தை வளர்க்காமல் மரங்களை வளர்ப்போம்: கருணாநிதி
சென்னை:
மதங்களை வளர்த்தால், அது தலையைக் கொண்டு வா, நாக்கைக் கொண்டு வா என்று கேட்கும். எனவே மனிதகுலத்துக்குப் பயன்படும் மரங்களை வளர்த்தால் மக்களை வாழ வைக்கப் பயன்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் அமைப்பின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டரை கோடி மரக் கன்றுகளை நடும் தொடக்க விழா நடந்தது.
இதில் முதல்வர் கருணாநிதி, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ஈஷா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் துறவிகளிடம் கொண்டுள்ள பாசம், பற்று எத்தகையது என்பதையும், எப்படிப்பட்ட துறுவிகளிடத்தில் பற்றும் பாசமும் கொண்டிருப்பேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நான் இந்து மதத்திலே பெரும் துறவியாக கருதப்படுகிற, மறைந்த குன்றக்குடி அடிகளாரிடம் எனக்கு மிகுந்த அன்பு உண்டு.
காரணம் அவரிடத்திலே குடிகொண்டிருந்த தமிழ் மீது, இப்போது இளைய தம்பிரான், இளைய மடாதிபதி குன்றகக்குடி பொன்னம்பல அடிகளாரிடமும் அதே அன்பு தொடர்கிறது. காரணம் அவர்கள் தமிழ் வளர்ப்பதால்.
நம்முடைய சத்குரு அவர்களிடம் அன்பு பெருக காரணம், அவர்கள் தமிழ் வளர்க்கிறார்கள், இவர்கள் மனிதர்களுக்குத் தேவையான மரம் வளர்க்கிறார்கள் என்பதால்தான். மதத்தை வளர்க்காமல், மரத்தை வளர்ப்பவர்களைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன்.
மதத்தை வளர்த்தால் தலையைக் கொண்டு வா, கையைக் கொண்டு வா, நாக்கைக் கொண்டு வா என்பார்கள். மரத்தை வளர்த்தால், மனிதர்களுக்கு அது வாழ பயன்படும் என்ர நல்லுரையை அவர்களுக்கு வழங்கிட முடியும்.
நாங்கள் ஒரே நாளில் காட்ட முடியாத ஒரு பெரிய மாநாட்டை சத்குரு இன்றைக்கு கூட்டிக் காட்டியிருக்கிறார் என்றால் நான், இனி தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் கொள்ளை லாபம், கொள்ளை அதிர்ஷ்டம் என்றுதான் நம்பி மகிழ வேண்டியிருக்கிறது.
மன்னர் ஆட்சிக் காலத்திலேயே கூட மரங்களை வளர்ப்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. மக்கள் ஆட்சிக்காலத்தில், அது மேலும் பெருகிட வேண்டும் என்ற எண்ணத்தினாலே தான் நமது இந்திய அரசு மரம் வளர்ப்பதற்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்து மர வாரம் என்ற ஒரு வாரத்தை உருவாக்கி அந்த வாரம் முழுவதும் மரம் நடுகிற வாரம் என்று கொண்டாடப்பட்டது.
சென்னை நகரின் சாலைகளில் மரங்களுக்குப் பதிலாக பெரிய பெரிய பேனர்களைப் பார்க்கிறோம். பெரிய பெரிய விளம்பரங்களை வைக்கிறோம். கோபுர உயரத்திற்கு இருக்கிற பட விளம்பரங்களைப் பார்க்கிறோம்.
மரங்கள் வளர்வது வழியில்லாமல், மரங்கள் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கும் வழியில்லாமல், மரங்களால் ஒரு நகரத்திற்கு ஏற்பட வேண்டிய எழில் குலுங்குகின்ற அந்தத் தன்மையும் இன்ற பறிக்கப்பட்டு விடுகிறது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் ஈஷா காட்டுப் பூ என்ற தமிழ் மாத இதழை கனிமொழி வெளியிட, சுதா ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications