திமுக பந்த்: தடை செய்யக் கோருகிறார் சுவாமி
சென்னை:
திமுக அறிவித்துள்ள பந்த் சட்டவிரோதமானது. இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். முடியாவிட்டால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சிவராஜ் பாட்டீலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்பு நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது. முதல்வர் கருணாநிதியே இதை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரானது.
எனவே இந்த பந்த்தை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த வேண்டும். மீறி திமுகவினர் பந்த் நடத்தினால் அரசியல் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் மீது திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், அவற்றுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications