தமிழக-கேரள போக்குவரத்து 12 மணி நேரம் பாதிப்பு
தென்மலை:
கேரள மாநிலத்தில் வாகனம் பழுதானதால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
![]() |
| Click here for more images |
மதுரை மாவட்டம், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் ஆரியங்காவிலிருந்து புனலூர் வரையிலுள்ள 35 கிமீ தூரம் மலை வழி சாலை ஒரு வழிப்பாதை உள்ளது.
இப்பாதை வழியாகத்தான் கொல்லம் கொச்சி துறைமுகம், திருவனந்தபுரம் விமான நிலையம் போன்ற பகுதிகளுக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்தும், மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும் பேரூந்துக்கள், கார் போன்றவைகளும் சென்று வருகி்ன்றன.
இச்சாலை கடந்த 3 மாதங்களாகவே பழுது ஏற்பட்டு லேசான குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பெரும் சிரமத்தோடு வாகன ஓட்டிகள் சென்று வந்த நிலையில் கடந்த மாதம் ஆரியங்காவு, தென்மலை பகுதிகளிலுள்ள பல உள்ளூர் வி.ஐ.பிக்கள் குண்டும், குளியுமான சாலைகளில் மண் அள்ளி போட்டு நிரப்பி அவ்வழியே வரும் வாகனங்களில் இஷ்டம் போல் கெடுபிடி வசூலை நடத்தினர்.
ஆனால் அடுத்து பெய்த மழையில் அவர்கள் போட்ட மண் மீண்டும் தண்ணீரில் அரித்து செல்லப்பட்டு சாலைகள் மேலும் குண்டும், குழியுமாகி மாறியது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஆரியங்காவை அடுத்த கழதுருட்டி 13 கண் ரயில்வே பாலத்தையும்-தென்மலை ஆறுக்கும் இடையே உள்ள இச்சாலையில் மோசமான குழியில் செல்லும் போது ஒருசரக்கு வாகனம் ஆக்ஸில் உடைந்து நடுரோட்டில் தீடீரென நின்றதால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் ஆயிரக்கனக்கான வாகனங்களும் கேரளாவிலிருந்து தமிழகம் செல்லும் ஆயிரக்கனக்கான வாகனங்களும் இரு புறங்களில் அகல முடியாத நிலையில் சிக்கி தவித்தன.
தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் இன்று காலை 8 மணியளவில் பழுதான லாரியை சரி செய்து அப்புறப்படுத்தினர். சுமார் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஏராளமானோர் பெரும் பாதிப்பினை அடைந்தனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் திருவிழாவான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை போன்றவைகள் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுதாகரன், தமிழகத்தில் முக்கியமாக செங்கோட்டை புனலூர் வழியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அதிகம்.
கடந்த ஆண்டு 4 கோடி பேர் வந்தனர். இந்த ஆண்டு சுமார் ஐந்தரை கோடி பேர் சபரிமலை வருவார்கள். மொத்தம் ரூ.120 கோடி வருமானம் கோவிலுக்கு கிடைத்தது.
செங்கோட்டை-புனலூர் இடையே சாலைகளை சீரமைக்க ரூ.17.5 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சபரிமலை சீசன் தொடங்கிட இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் மோசமான சாலையாக இச்சாலை மாறி வருவதால் விரைவாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications