5 ஐஐஎம் மாணவர்களுக்கு ஒரு கோடி சம்பளத்தில் வங்கி வேலை!
கொல்கத்தா:
கொல்கத்தா ஐஐஎம் மாணவர்கள் ஐந்து பேருக்கு ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வங்கி வேலை கிடைத்துள்ளது.
கொல்கத்தா ஐஐஎம்-ஐ சேர்ந்த 4 மாணவர்கள் கடந்த வருடம் இதே ஊதியத்தில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த வருடம் இந்த பணியிடத்துக்கு 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
இதே வங்கிகளில் சீனியர் அனலிஸ்ட் பணிக்கு ஆண்டிற்கு 70 முதல் 80 லட்சம் ஊதியத்தில் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள். இந்த வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதில் தனியார் கன்சல்ட்டிங் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.
மெக்கின்ஸி அன்ட் பாஸ்டன் நிறுவனம் தான் வங்கிகளுக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளது. ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் 10 பேர் படிப்பை முடிப்பதற்கு முன்பு வேலைக்கான ஆர்டரை பெற்றுள்ளனர். கடந்த வருடம் ஒருவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தது.
கடந்த வருடம் கொல்கத்தா ஐஐஎம்-ல் படித்த 50 பேருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 37 பேருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.