சேது: மாணவர்களுக்கு பொன்முடி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு மதச் சாயம் பூசி அதைத் தடுக்க முயலும் மதவாத சக்திகளிடம் மாணவர் சமுதாயம் ஏமாந்து விடாமல் உஷாராக இருக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருச்சி தேசியக் கல்லூரியின் விலங்கியல் துறை வெள்ளிவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பொன்முடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கண் மூடித்தனமான நம்பிக்கைகள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே வர அனுமதிக்கக் கூடாது.
சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்கியவர்களே இப்போது அதைத் தடுக்க முயலுகின்றனர். அதற்கு மூடத்தனமான காரணங்களையும் கூறுகின்றனர். இதை மாணவர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளை அறிவியல்பூர்வமான முறையில் மாணவர்கள் பார்க்க வேண்டும். அணுக வேண்டும் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications