For Daily Alerts
Just In
கராத்தே சம்மேளன காப்பாளர் கார்த்தி சிதம்பரம்
சென்னை:
மத்திய நிதியைமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்தி சிதம்பரம், அகில இந்திய கராத்தே சம்மேளனக் காப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கராத்தே சம்மேளனத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் சம்மேளனத்தின் காப்பாளராக கார்த்தி சிதம்பரம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Saturday, December 15, 2007, 21:57 [IST]