கள்ளசாராய வியாபாரிகளுக்கு குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கள்ளசாராயம் விற்று வந்த இருவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மது வகைகளும், கள்ளசாராயமும் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மாவட்ட எஸ்பி தேன்மொழி அதிரடியாக ரகசிய ரெய்டு நடத்தினார். அப்போது மேலேறி கொட்டாயி என்ற பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரும், நாக அரசம்பட்டியைச் சேர்ந்த தம்பித்துரை என்பவரும் சிக்கினர்.
இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குள் உள்ளதால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்தோஷ்பாபுவுக்கு மாவட்ட எஸ்பி தேன்மொழி பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீவ் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications