கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
நெல்லை பாளையங் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பாளையங் கால்வாய் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன. எனினும் கடை மடை பகுதிகளுக்கு பாளையங் கால்வாய் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. தற்போது விவசாயிகள் கார் பருவ நெல்விவசாயம் செய்துள்ளனர்.
பயிர்கள் வளர்ந்து பால் கட்டியுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாளையங்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை கண்டித்து பாளை யூனியன் திருமலைக்கொழுந்துபுரம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications