துபாயில் காந்தி பிறந்த நாள் விழா

Subscribe to Oneindia Tamil


துபாய்:

துபாய் இந்திய தூதரகம் சார்பில், இந்திய உயர்நிலைப்பள்ளியுடன் இணைந்து இன்று (அக்டோபர் 2) மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா சிறப்புற கொண்டாடப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வன்முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசத்தந்தையின் 138 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி துபாய் இந்திய கன்சுலேட் ஜெனரல் அலுவலகம் இதை சிறப்புற கொண்டாடியது.

இற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் மகாத்மா காந்தி பிறந்த நாள் சிறப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். இதற்காக அவர் நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தியும் சென்றுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் ராகுல் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+