மதுரையில் சிறுமிகளை அம்மனாக வழிபடும் கிராம திருவிழா!
மதுரை:
மதுரை மாவட்டத்தில் சிறுமிகளை அம்மனாக நினைத்து வழிபடும் வினோத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் புகழ் பெற்ற ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலின் இந்த வருட திருவிழா கடந்த 18 ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்ன வென்றால் அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் 7 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பூசைகள், செய்வர். மேலும் கோயிலில் அம்மனுக்கு என்ன என்ன சிறப்பு அலங்காரம் செய்வார்களோ அது போன்றே செய்வது வழக்கம்.
அம்மன் வேடம் தரித்த அந்த 7 சிறுமிகளும் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்குவர்.
இந்த கோவிலில் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். ஆண்கள் வைக்கோலை தரித்து உடல் முலுவதும் கட்டியும், பெண்கள் தங்களது நேர்த்தி கடனை பனங்கள்ளையும், பாலயையும் கலந்த மண் சட்டியில் கலந்து கொண்டு வந்து அம்மனுக்கு படைக்கின்றனர்.
இந்த வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறுமிகளை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications