திருச்சி அருகே வெடிபொருள் குவியல் - வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பெருமளவில் வெடிபொருட்களுடன் வாலிபர் ஒருவரை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி அருகே நெடுமலை என்ற கிராமத்தில் ஒருவரது வீட்டில் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அந்தக் கிராமத்திற்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். அங்குள்ள ராஜேஷ் என்பவரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ஆறு பைகளில் இருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பியூஸ் வயர்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உரிய உரிமம் இல்லாமல் இவற்றை வைத்திருந்தார் ராஜேஷ். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications