For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுத்த பணத்தை கேட்டவருக்கு அடி உதை

By Staff
Google Oneindia Tamil News


அறந்தாங்கி:

அறந்தாங்கியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறந்தாங்கியை அடுத்துள்ள அரசர்குளத்தில் வசிப்பவர் பக்ரீ்ன்மைதீன். இவரும், இவரது மகள் புரூகானும் சிங்கப்பூருக்கு செல்வதற்காக விசா வாங்க அரசர்குளத்தை சேர்ந்த முகமது ஜாலீப்பிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட முகமது அவர்கள் இருவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் சென்ற விசா போலியானது என்பதால் குடியுரிமை அதிகாரிகளால் அவர்கள் உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியா திரும்பியவுடன், தனக்கு போலி விசா கொடுத்த ஏமாற்றிய முகமது ஜாலீப்பிடம் தனது பணதை திருப்பி தருமாறு பக்ரீ்ன்மைதீனும் அவரது மகள் புரூகானும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது அவர்கள் இருவரையும் தகாத வார்தைகளால் திட்டியதோடு பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். தொடர்ந்து அவர்கள் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால், இருவரையும் முகமது ஜாலீப் அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பக்ரீ்ன்மைதீன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

இது குறித்து அறந்தாங்கி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X