ஆபாச சிடிக்கள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி:
தூத்துக்குடியில் ஆபாச சிடிக்கள் விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடியில் ஆபாச சிடிக்கள் மற்றும் திருட்டு விசிடிக்கள் விற்பனை அதிகம் இருப்பதாக நெல்லை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நாகசங்கர் தலைமையில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் சில சிடிகடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு கடையில் இருந்து 160 ஆபாச சிடிகள் மற்றும் 160 புதிய சினிமா சிடிக்கள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் ஷாஜகானை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆபாச சிடிக்கள் மற்றும் புதிய சினிமா திருட்டு சிடிக்கள் 320வை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஷாஜகான் மீது ஏற்கனவே 4 ஆபாச சிடி வழக்குகள் உள்ளது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நாகசங்கர் பரிந்துரையின்பேரில் தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டி உத்தரவின் பேரில் ஷாஜகான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்மாவட்டங்களில் திருட்டு மற்றும் ஆபாச சிடி வழக்கில் முதல் முறையாக ஷாஜகான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு விசிடிக்களை தொடர்ந்து விற்பனை செய்துவருபவர்களை இதே போன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தால் திருட்டு விசிடி விற்பனை ஓரளவு குறையும்.












Click it and Unblock the Notifications