மதுரையில் 2 பிரபல ரவுடிகள் வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையைக் கலக்கி வந்த இரண்டு பிரபல ரவுடிகளை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆர்.பிரபு (21), அவரது உறவினர் மணிமாறன் (20). இருவரும் பிரபல ரவுடிள். இவர்கள் மீது பல்வேறு கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் இருவரும் ஜாமீனில் விடுதலையாகி வந்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வைகை ஆற்றில் பிணமாகக் கிடந்தார்கள்.
இதுகுறித்து ஆற்றுக்கு வந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டனர்.
முன்விரோதம் காரணமாக இருவரும் போட்டி ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications